மலைமகள் மணாளன் ஈசனைக்காணக்
       கைலாயம் செல்ல வேண்டுமெனின் அந்த ஈசன் வேண்டாம்
அலைமகள் மணாளன் கண்ணனைக் காணக்
       வைகுண்டம் செல்ல வேண்டிமெனின் அந்தக் கண்ணன் வேண்டாம்
கலைமகள் மணாளன் பிரம்மனைக் காணக்
       கரைகடந்து செல்ல வேண்டுமெனின் அந்தப் பிரம்மன் வேண்டாம்
மலைகள் சூழ் சதுரகிரியில் வாழும் அன்னபூரணி
       அன்புடம் அளிக்கும் அமுதம் போதும் எனக்கு
|