Tamil Poetry மரபுக் கவிதைகள்

முண்டாசுப் புலவன் பாரதிக்கு
அண்டங்காக்கையும் அவன்சாதி
பெண்டாட்டிக்கு ஒருவாய் அந்த
அண்டங்காக்கையும் ஒருவாய் என
அண்டமும் அகிலமும் புகழ தரணியில்
கண்மூடும் வரை வாழ்ந்தவன்

பஞ்சம் அவன் வாழ்வு பெண்டாட்டிக்கு
கொஞ்சம் கூட உணவில்லையெனினும் நெஞ்சுயர்த்தி
வீதியில் வீறு நடை போட்டான் எட்டயபுரத்தாள்
சாதிகள் இல்லையடியென்றான்