Tamil Poetry மரபுக் கவிதைகள்

நானும் நீயும் அன்புற்று 
----நாளும் பொழுதும் இன்புற்று
தேனும் பாலும் பருகிட்டு
----ஓடித் தேடி ஆடிட்டு 
வானும் நிலவு மெனயிணைந்து 
----வாய்கால் வரப்பில் நடந்திட்டு 
மானும் மானும் போல்துள்ளி
----மாலை வரையில் ஆடிடுவோம்